Winner மு.தை.பூமிநாதன்
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
மு.தை.பூமிநாதன் எழுதிய வரிகள்:
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் அவனே மனிதனடா.......
அவனே மனிதனடா.....
பொய்யும் புரட்டும் சூழ்ந்திடும்
உலகில் அவனே புனிதனடா,.......
அவனே புனிதனடா......
சரணம் 1
ஆசையும் கோபமும் சேர்ந்திடும் மனதில்
அழுக்குகள் தேங்கிநிற்கும்.....
ஆனவம் கண்களை மறைப்பதனால் அங்கு அக்ரமம் ஓங்கி நிற்கும்....
நம் செயலால் பிறர் துன்பத்தை அடைந்தால் அது பெரும் சுயநலமே....
மனதிற்குத் தெரிந்தே தவறுகள் செய்தால் மனிதம் இறந்திடுமே.....
பல்லவி
உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் இருந்தால் அவனே மனிதனடா.......
அவனே மனிதனடா.....
பொய்யும் புரட்டும் சூழ்ந்திடும்
உலகில் அவனே புனிதனடா,.......
அவனே புனிதனடா......
சரணம் 2
நெஞ்சுக்குள் நீதியும் வாய்மையும் இருந்தால் மனிதம் மலர்ந்திருக்கும்....
நேர்படப் பேசிடும் மாசில்லா மனதில்
நிம்மதி வளர்ந்திருக்கும்....
உள்ளத்தின் தூய்மை ஒன்றே போதும்
அதுவே அறமாகும்....
நம் வள்ளுவன் கூறிய வாழ்கை நெறி
வாழ்வின் உரமாகும்.....
மு.தை.பூமி
